×

மாநகர பர்னிச்சர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மருத்துவமனைக்கு நீர் படுக்கைகள் வழங்கல்

தூத்துக்குடி, பிப்.9: தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுக்கு மாநகர பர்னிச்சர் சங்கத்தினர் நீர்படுக்கைகள் வழங்கினர். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தினவிழா நடந்தது. இவ்விழாவின்போது, தூத்துக்குடி மாநகர பர்னிச்சர் சங்கம், மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் மற்றும் ராஜாஜி பூங்கா நடைப்பயிற்சி நண்பர்கள் சங்கம் சார்பில் மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுக்கு 6 நீர்படுக்கைகளை வழங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதிபாலனிடம் தூத்துக்குடி மாநகர பர்னிச்சர் சங்க தலைவர் ரத்னா தர்மராஜ் வழங்கினார். இதில், உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெபமணி, புற்றுநோய் பிரிவு டாக்டர்.லலிதாராமசுப்பிரமணியன், டாக்டர். இன்சுவை, தூத்துக்குடி மாநகர பர்னிச்சர் நிர்வாகிகள் பவுல்ராஜ், ஆனந்தசேகர், செல்வக்குமார், முருகன், வெள்ளப்பாண்டி, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ், அவைத்தலைவர் கண்டிவேல், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், ராஜாஜி பூங்கா நடைபயிற்சி நண்பர்கள் சங்க ஆறுமுகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Thoothukudi Hospital ,Municipal Furniture Association ,
× RELATED தூத்துக்குடி மருத்துவமனையில் ஏ.சி. வார்டு தொடக்கம்..!!